Thursday, August 28, 2008

வர்ம மருத்துவ உடல் பிரிவுகள்.

ஒரு பெண் குழந்தைக்கு பள்ளியில் கரும்பலகையில்
ஆசிரியர் எழுதுவது தெறியவில்லை அதற்காக ஒரு
மாத அக்குப் பிரசர் ஊசிமூலம் சிகிச்சை அளித்தேன்
தற்போது 90 சதம் குணமடைந்து பார்வை தெளிவாக
உள்ளது.அந்த திழற்படந்தான் மேலே நீங்கள் காண்பது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மருத்துவ உடல் பிரிவுகள்.

நமது உடல் பஞ்ச கண்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. சிரசு அதாவது கழுத்திக்கு மேல் பகுதி.
2. நாபி கண்டம் கழுத்துக்கு கீழ் தொப்புள் வரை.
3. மூலக் கண்டம் தொப்புள் முதல் மூலம் வரை.
4. கர கண்டம் இரு கைகளும்.
5. பாத கண்டம் இரு கால்கள்.

உடலில் உள்ள உறுப்புக்கள்-32 ஆகும். இவைகளில் ஒடிவு, முறிவு, குத்து, இடரல், ஏற்பட்டால் வர்ம காயம் ஏற்படும்.

நமது உடலில் உள்ள உறுப்புகள் எலும்புகள் 208 ஆகும். நரம்புகள் 72000 உள்ளன. நரம்புகளிலும் ஏற்படும் பேதங்களினால் இடி, குத்து, தாக்குதல் இவைகளால் வர்மங்கள் ஏற்படும் உடலின் உள் பஞ்ச அடுகுகள், தசபூட்டு விசை உடலில் ஐந்துவிதமான தட்டுக்கள் உள்ளன.

மருத்துவ முறை.

அக மருத்துவம் நாம் உள்ளே சாப்பிடும் மருந்துகள் அக மருந்துகள் நெய்மூலமாகவும், தேன் மூலமாகவும் நோயிக்குத் தக்க மருந்துகளையும், அனு பானங்களையும் மருந்தை முறையாக சுத்தி செய்தும், 1.கஷாயம் மூலமாகவும், 2.பதங்கம், 3.வெள்ளை மூலமாகவும். 4. லேகியம் 5. எண்ணெய் 6.குளிகை, 7.தீநீர்,8. மெழுகு. 9. செந்தூரம் 10. குடி நீர். கற்கம்,11. குழம்பு,
12 செந்தூரம். 13 பற்பம், 14.கட்டு,15.உருக்கு, 16.களங்கு, 17. சுண்ணம்,
18. சத்து, 19. களி, 20. அடை, 21. சூரணம், 22. இரசாயனம், 23. மணபாகு, 24. தேனூறல், 25. சர்பத், 26. மாத்திரை, 27. குருகுளிகை,28. ரசம், 29. கிரதம், 30. கற்கம், 31. புட்டு, 32. வடகம், மூலமாக உடல் உள் மருத்துவ முறையாக கொடுக்கப் படுகின்றன.

புற மருந்துகள்.

உடலில் வெளி அவையங்களில் வெளி உபயோக மருந்துகளை கொண்டு நோயின் தன்மைகளை சுகப் படுத்தும் முறை.

கட்டுதல், பீச்சு, புகை, மையிடல், பொடியிடுதல், நசியம், கலிக்கும், ஊதல், நாசிகாபரணம், முறிச்சல், கீறல், காரம், அறுவை, பட்டை கட்டல், உறிஞ்சல், அசுத்த ரத்தத்தை வாங்குதல், அட்டைவிடல், கட்டிகை, வர்த்தித்தல், நீர், சீலை, களிப்பு, தொக்கணம், பொட்டணம், வேதுகாட்டல், பூச்சு, ஒற்றடம், பற்றிடல், பசை,களி, சலாகை, சிட்டிகை முதலியன.

ஏழு தாதுக்கள் கூடினால் குறைந்தால் என்ன வாகும்.

1.சாரம் கூடினால் பசிகுறைவு.

சாரம் குறைந்தால் தோல் சுரசுரப்பு, நோவு, இளைப்பு, வாட்டம், சப்தத்தில் வெறுப்பு.

2.குருதி கூடினால் புருவம், உதடு, கொப்புள், அண்டம், தோலின் உட்புறம், வெளிப்புறம், உள் பட்ட இடத்தில் கொப்புளம் காணல், ஈரல் வீக்கம், கட்டி, சூலை, பசியின்மை, குருதி வாந்தி, இரத்த மூத்திரம், சிவந்த கண், தோல் சிவப்பு, குருதி தடிப்பு, பெருநோய்,காமாலை, வெறி முதலியன.

குருதி குறைந்தால் புளிப்பு குளிர்ச்சிப் பொருளில் அவா, நரம்பு தளர்ச்சி, வறட்சி, உடல் நிறம் குன்றல் ஆகியவை.

3 ஊனின் கூடினால் கன்னம், வயிறு, தொடை, குறி இவற்றில் கட்டிகள், கண்டமாலை, கிரந்தி, கழுத்து வீங்குதல் முதலியன.

ஊன் குறைந்தால் ஐம்பொறி சோர்வு, கீழ்வலி, தாடை, பிட்டம், தவடை, குறி இவை சுருங்குதல்.

4.கொழுப்பின் அளவு கூடினால் ஊன் மிகுதி பிணிகள், களைப்பு, சின்ன வேலைகளிலும் பெருமூச்சு, பிட்டம், குறி, மார்பு, வயிறு, தொடை ஊன் பெருகி தொங்கல் விழும்.

கொழுப்பு குறைந்தால் இடுப்பு பலவீனமுற்று வலித்தல், உடலிளைப்பு, ஈரல் வளர்ச்சி முதலியன.

5.எலும்பு கூடினால் எலும்புகளும், பற்களும் கூடுதல்.

எலும்பு குறைந்தால் எலும்பு சத்துக்களில் வலி, பற்கள் விழுதல், நகம், மயிர் உதிர்தல், வெடித்தல் முதலியன.

6. மூளை வளர்ச்சி கூடினால் உடல் பாதித்தல், விரல் கணுக்களில் அடி பருத்தல், சிறு நீர் குன்றல் முதலியன.

மூளை குறைவு ஏற்பட்டால் எலும்பு, தோள் விழும், திகைப்பு, கண்கம்மல் இவை காணும்.

7. சுக்கிலம் கூடினால் பெண்ணிச்சையும், கல்லடைபும் வரும்.

சுக்கிலம் குறைந்தால் புணர்ச்சியில் வெண்ணீரும்,சுரேணிதமும் துளியாக வரும், குருதி வரும், விதை குத்தலுடன் வலி, குறி கருத்தல் முதலியன உண்டாகும்.


-------------------------------------------(தொடரும்)

No comments: