Thursday, August 28, 2008

வர்ம மருத்துவ உடல் பிரிவுகள்.

ஒரு பெண் குழந்தைக்கு பள்ளியில் கரும்பலகையில்
ஆசிரியர் எழுதுவது தெறியவில்லை அதற்காக ஒரு
மாத அக்குப் பிரசர் ஊசிமூலம் சிகிச்சை அளித்தேன்
தற்போது 90 சதம் குணமடைந்து பார்வை தெளிவாக
உள்ளது.அந்த திழற்படந்தான் மேலே நீங்கள் காண்பது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மருத்துவ உடல் பிரிவுகள்.

நமது உடல் பஞ்ச கண்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. சிரசு அதாவது கழுத்திக்கு மேல் பகுதி.
2. நாபி கண்டம் கழுத்துக்கு கீழ் தொப்புள் வரை.
3. மூலக் கண்டம் தொப்புள் முதல் மூலம் வரை.
4. கர கண்டம் இரு கைகளும்.
5. பாத கண்டம் இரு கால்கள்.

உடலில் உள்ள உறுப்புக்கள்-32 ஆகும். இவைகளில் ஒடிவு, முறிவு, குத்து, இடரல், ஏற்பட்டால் வர்ம காயம் ஏற்படும்.

நமது உடலில் உள்ள உறுப்புகள் எலும்புகள் 208 ஆகும். நரம்புகள் 72000 உள்ளன. நரம்புகளிலும் ஏற்படும் பேதங்களினால் இடி, குத்து, தாக்குதல் இவைகளால் வர்மங்கள் ஏற்படும் உடலின் உள் பஞ்ச அடுகுகள், தசபூட்டு விசை உடலில் ஐந்துவிதமான தட்டுக்கள் உள்ளன.

மருத்துவ முறை.

அக மருத்துவம் நாம் உள்ளே சாப்பிடும் மருந்துகள் அக மருந்துகள் நெய்மூலமாகவும், தேன் மூலமாகவும் நோயிக்குத் தக்க மருந்துகளையும், அனு பானங்களையும் மருந்தை முறையாக சுத்தி செய்தும், 1.கஷாயம் மூலமாகவும், 2.பதங்கம், 3.வெள்ளை மூலமாகவும். 4. லேகியம் 5. எண்ணெய் 6.குளிகை, 7.தீநீர்,8. மெழுகு. 9. செந்தூரம் 10. குடி நீர். கற்கம்,11. குழம்பு,
12 செந்தூரம். 13 பற்பம், 14.கட்டு,15.உருக்கு, 16.களங்கு, 17. சுண்ணம்,
18. சத்து, 19. களி, 20. அடை, 21. சூரணம், 22. இரசாயனம், 23. மணபாகு, 24. தேனூறல், 25. சர்பத், 26. மாத்திரை, 27. குருகுளிகை,28. ரசம், 29. கிரதம், 30. கற்கம், 31. புட்டு, 32. வடகம், மூலமாக உடல் உள் மருத்துவ முறையாக கொடுக்கப் படுகின்றன.

புற மருந்துகள்.

உடலில் வெளி அவையங்களில் வெளி உபயோக மருந்துகளை கொண்டு நோயின் தன்மைகளை சுகப் படுத்தும் முறை.

கட்டுதல், பீச்சு, புகை, மையிடல், பொடியிடுதல், நசியம், கலிக்கும், ஊதல், நாசிகாபரணம், முறிச்சல், கீறல், காரம், அறுவை, பட்டை கட்டல், உறிஞ்சல், அசுத்த ரத்தத்தை வாங்குதல், அட்டைவிடல், கட்டிகை, வர்த்தித்தல், நீர், சீலை, களிப்பு, தொக்கணம், பொட்டணம், வேதுகாட்டல், பூச்சு, ஒற்றடம், பற்றிடல், பசை,களி, சலாகை, சிட்டிகை முதலியன.

ஏழு தாதுக்கள் கூடினால் குறைந்தால் என்ன வாகும்.

1.சாரம் கூடினால் பசிகுறைவு.

சாரம் குறைந்தால் தோல் சுரசுரப்பு, நோவு, இளைப்பு, வாட்டம், சப்தத்தில் வெறுப்பு.

2.குருதி கூடினால் புருவம், உதடு, கொப்புள், அண்டம், தோலின் உட்புறம், வெளிப்புறம், உள் பட்ட இடத்தில் கொப்புளம் காணல், ஈரல் வீக்கம், கட்டி, சூலை, பசியின்மை, குருதி வாந்தி, இரத்த மூத்திரம், சிவந்த கண், தோல் சிவப்பு, குருதி தடிப்பு, பெருநோய்,காமாலை, வெறி முதலியன.

குருதி குறைந்தால் புளிப்பு குளிர்ச்சிப் பொருளில் அவா, நரம்பு தளர்ச்சி, வறட்சி, உடல் நிறம் குன்றல் ஆகியவை.

3 ஊனின் கூடினால் கன்னம், வயிறு, தொடை, குறி இவற்றில் கட்டிகள், கண்டமாலை, கிரந்தி, கழுத்து வீங்குதல் முதலியன.

ஊன் குறைந்தால் ஐம்பொறி சோர்வு, கீழ்வலி, தாடை, பிட்டம், தவடை, குறி இவை சுருங்குதல்.

4.கொழுப்பின் அளவு கூடினால் ஊன் மிகுதி பிணிகள், களைப்பு, சின்ன வேலைகளிலும் பெருமூச்சு, பிட்டம், குறி, மார்பு, வயிறு, தொடை ஊன் பெருகி தொங்கல் விழும்.

கொழுப்பு குறைந்தால் இடுப்பு பலவீனமுற்று வலித்தல், உடலிளைப்பு, ஈரல் வளர்ச்சி முதலியன.

5.எலும்பு கூடினால் எலும்புகளும், பற்களும் கூடுதல்.

எலும்பு குறைந்தால் எலும்பு சத்துக்களில் வலி, பற்கள் விழுதல், நகம், மயிர் உதிர்தல், வெடித்தல் முதலியன.

6. மூளை வளர்ச்சி கூடினால் உடல் பாதித்தல், விரல் கணுக்களில் அடி பருத்தல், சிறு நீர் குன்றல் முதலியன.

மூளை குறைவு ஏற்பட்டால் எலும்பு, தோள் விழும், திகைப்பு, கண்கம்மல் இவை காணும்.

7. சுக்கிலம் கூடினால் பெண்ணிச்சையும், கல்லடைபும் வரும்.

சுக்கிலம் குறைந்தால் புணர்ச்சியில் வெண்ணீரும்,சுரேணிதமும் துளியாக வரும், குருதி வரும், விதை குத்தலுடன் வலி, குறி கருத்தல் முதலியன உண்டாகும்.


-------------------------------------------(தொடரும்)

Friday, August 15, 2008

வர்மமும் நமது உடல் அமைப்பும்.

வர்மமும் நமது உடல் அமைப்பும்.

நமது கண்பார்வையில் தெரியும் உடலமைப்பும்-:

1) இதய-ரத்த ஓட்ட சுழற்சிப் பாதை
2) சுவாச பாதை.
3) உணவு பாதை.
4) எலும்பு மண்டலம்.
5) தசை மண்டலம்.
6) நிணநீர் மண்டலம்.
7) நாளமில்லா சுரபிகளின் பாதை.

சக்தியை பயன்படுத்தி வாசி இயக்கம், அமிர்த நிலை இயக்கம் உள்ளன. அவை-:

1. வாசி தச நாடிகளை சார்ந்து ஓடும்.

2. அமிரத நிலை சந்திரனில் ஏற்படும் வளர்பிறை தேய்பிறைகளை ஒத்து உடல் நிலை மாறுபடும். இவ்விரண்டும் வேலை செய்யும் போது அதன் நிலையில் நிற்கும் போது உடலில் அடியோ, மிதியோ, வேகமாகத் தாக்கும், தாக்குதல் பட்டால் வர்மம் ஏற்படும். இவைகள் தாக்கப்படும் போது உடலில் சில புள்ளிகள் அதாவது தசவாயு, தசநாடி, பஞ்சபூதங்கள் இருக்கும் இடங்களில் 12 உறுப்புகளில் உண்டாகும் நரம்பு பாகங்களில் சில புள்ளிகள் உள்ளன. அதுவே வர்மபுள்ளிகளாகும்.

பொறிகள் 5 மர்மம் ஏற்பட்டல் ஏற்படும் வித்தியாசம்.

செவி- ஒலியை அறியும் இவை உடலில் சில இடங்களில் வர்ம புள்ளிகளில் தாக்கும் போது செவியானது தன்னுடைய ஒலி கேட்கும் திறன் குறையும்.

தோல்- வாயு உடனிருந்து உடலை தொடு உணர்வை அறியும். சில வர்மங்களில் அடிபடும் போது உணர்விழந்து மயக்கம் வரும்.

மூக்கு- வாசனையறியவும், வர்மங்களில் அடி படும் போது நீர் வடியும், வாசனை குறையும்.

கண்- பார்க்கும் திறன். அடிபடும்போது கண்களை மூடிக்கொள்ளும். கண் நிலை குத்தி செயல் படாமல் போகும் கண்ணில் நீர் வடியும்.

நாக்கு- சுவை அறியும். சில வர்மங்களில் நாக்கு அடிபட்டால் உள இழுக்கும், அல்லது வெளியே நாக்கு தொங்கிவிடும்.

கன் மேந்திரியம்-:

வாய்- பேச்சுகுரல் கொடுக்கும் இவை வர்மத்தில் தாக்கப்பட்டால் பேச்சு வராது, வாய் பூட்டிக் கொள்ளும், வாய் கோணும்.

கை- வர்மங்களில் பாதித்தால் கை அசைவு இருக்காது, பலம் குறையும், விரல்கள், தசைகள் செயல்படாது.

கால்- பாதம் உணர்ச்சியில்லாமலும் நடக்கும் சக்தியில்லாமலும் நரம்புகள் செயலற்றுப் போகும்.

குதம்-மலத்தைக்கழிக்கும் தன்மையிழந்து தானாகவே வெளியேறும். இது அபாயக் குறியாகும்.

குறி- பலமான வர்மங்கள் ஏற்பட்டால் விந்து தானாகவே வெளியேறும்.

உடலில் ஏற்படும் இயற்கை வேகங்களை அடக்கினால் ஏற்படும் விளைவுகள்.

1) சுவாசம்- சுவாசத்தை அடக்கினால் தொடர்ந்து இருமல்,வயிற்று பொறுமல், சுரம், சூலை நோய் சுவையின்மை நீர்த்தன்மையுண்டாகும்.
2) கண்ணீர்- கண்ணீரை அடக்கினால் தலைவலி, வயிற்று குன்ம ம், கண் நோய், மார்பு நோய் பீனிசம் வரும்.
3) வாந்தி- உடலில் தோல் நோய், நமச்சல், கண்நோய், பித்த விஷம், இரைப்பு, இருமல் வரும்.
4) இருமல்-இருமலை அடக்கினால் மூச்சு திணரல், மூச்சு துர்நாற்றம், இதயநோய் உண்டாகும்.
5) கொட்டாவி-கொட்டாவியை அடக்கினால் முகம் வாடும், இளைப்பு வரும், மண்டை பாரம், மேகநோய், வெட்டை நோய், உணவு செரிக்காமை
6) தும்மல்- தும்மலை அடக்கினால் தலை நோய், முகம் வலிக்கும், இடுப்பு வலி, வர்ம நோய், உண்டாகும்.
7) வாயு-வாயு கீழ் நோக்கினால் ஆசன வழியே செல்லும் அடக்கினால் மார்பு நோய், குடல் வாதம், உடல் வலி, துன்பங்கள், மலசலம் கட்டல், ஜீரண கோளாறு ஆகும்.
8) சிறு நீர்- சிறு நீரை அடக்கினால், கல்லடைப்பு, மூட்டு வலி, ஆண்குறி சோர்வு ஆகிய உண்டாகும்.
9) மலம்- அபான வாயு மலத்தை கீழ்நோக்கித்தள்ளும் மலத்தை அடக்கினால் முழங்கால் வலி, தலைவலி, உடல் சோர்வு, முகச்சோர்வு ஏற்படும்.
10) தாகம்,பசி- பசி அடக்கினால், தாகத்தை அடக்கினால்,உடல் உறுப்புகள் தத்தம் வேலைகளைச் செய்யாது. உடல் இளைப்பு, முகவாட்டம், மூட்டுக்களில் வலி, மூல சூடு, வயிற்று ரோகம் உண்டாகும்.
11) தூக்கம்- தூங்காமல் இருந்தால் மூல சுடு ஏற்படும், தலை பாரம், கண்வலி, செவிடு உண்டாதல், பேச்சு குறைதல்.
12) சுக்கிலம் சுரோணிதம்- அடக்கினால் சுரம், நீர்கட்டு கைகால் மூட்டுகளில் வலி, மார்பு அடைப்பு, வெள்ளை கசிதல்.
13) இளைப்பு- இருமலை அடக்கினால் நுரையீரல் நுண்ணிய தவாரங்கள் அடைப்பு, மூர்ச்சை உண்டாகும்.


-------------------------------------------(தொடரும்)