Wednesday, September 24, 2008

நாளமில்லா சுரப்பிகளும் அக்குவர்மா மருத்துவமும்.

நாளமில்லா சுரப்பிகளும் அக்குவர்மா மருத்துவமும்.

உடலில் பல வகை சுரபிகள்உள்ளன. தனித்தனியாக திரவங்களை சுரந்து அதற்கென இருக்கும் பாதைகளின் மூலம் இரத்தத்தில் கலந்து மூளை மற்றும் உடலின் சக்திகளை கட்டுப்படுத்தி சரயான முறையில் செயல்படுத்துகிறது. இவை நாளமில்லா சுரபிகள் ஆகும்.

பிட்யூட்டரி சுரபி -: இது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. சிறு பட்டாணி அளவு உள்ளது. இச்சுரபி மூளையுடனும் மூளையின் நரம்பு மண்டலத்துடனும் இணைந்து செயல்படும். சுரபிகளின் தலைமையாக வேலை செய்யும். இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதும் சிறுநீர் உரிய நேரத்தில் வெளிப்படவும் இதவும். தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்பாலைச்சுரக்க வைக்கிறது.

1. பிட்யூட்டரி சுரபி அதிகமாக சுரந்தால் மனிதன் மிகவும் உயரமாக வளருவான். முகத்தின் தாடை எலும்பு, கை விரல்கள், கட்டை விரல்கள், தேவைக்கு அதிகமாக வளரும். தலை எலும்பு பெருத்துவிடுதல்..

2. அதிகமாக வியர்த்தல், பெருத்த உடல் வளர்ச்சி.

3. மாணவ பருவத்தில் அபரிதமாக இருத்தல்.

4. ஆண்மை குறைவு, முதுகு தண்டு வலி, அடிக்கடி தலை வலி, தூக்கமின்மை.

5. உடல் பலஹீனம்.

6. பெண்களிக்கு மாதவிடாய் குறைவு, கூடுதல், சரியான நேரம் வருவதில்லை, கருப்பை வீக்கம், சிறுநீர் அதிகம் போதல், கண்பார்வை கோளாறு.

7. மூளை கட்டிகள்.

8. இதய கோளாறு.

9. நீரிழிவு.

பிட்யூட்டரி சுரபி குறைவாக சுரந்தால் -:

பசியின்மை, குமட்டல், குறை இரத்த அழுத்தம், குட்டை வளர்ச்சி, பிறப்பு உறுப்பு பாதித்தல், உடலில் தோல் சுருக்கம், கட்டிகள், மன வளர்ச்சி குறைந்து போதல், தலை தொண்டையில் உருவாகும் கட்டி, மேக கிரந்தி, சர்க்கரை அளவு குறைதல்.

தைராய்டு.

தொண்டை இரு பக்கங்களிலும் கழுத்தின் முன் புறத்திலும் இரண்டு சுரபிகள் உள்ளன. மூச்சுக் குழலின் மேல் பகுதியில் இரு புரமும் குறுகிய தைராய்டு திசுவினால் ஆனவை.

தைராய்டு அதிகமாக சுரந்தால் –நோய்கள்.

மாதவிடாய் குறைவு, உடல் அரிப்பு, எரிச்சல், கண் பாதிப்பு, ஜன்னி, வாந்தி, எடை குறைவு, பசி அதிகரிப்பு, சுண்ணாம்பு சத்து குறைவு, உயர் இரத்த அழுத்தம், விரல் நடுக்கத்துடன் பலவீனம், தொண்டை வீக்கம், தலையில் கொழுப்புக்கட்டி, இதய தசை துடிப்பு அதிகம், இளம் பெண்கள் இச்சுரபியால் பாதிப்பு.

தைராய்டு குறைந்தால் -: நோய்கள்.

ஹார்மோன் குறைவால் பிறவியிலிருந்து குழந்தை பாதிப்பு அடைதல். பிட்யூட்டரி சுரபியின் கோளாறு, எடை அதிகரிப்பு, தைராய்டு வீக்கம், வறட்சி, மூட்டு வீக்கம், முதுகு வலி, நகங்கள் ஒடியும், மந்தமாக இருப்பார்கள், பெண்கள் மாதவிடாய் 10 நாள் நீடிக்கும், உடலின் நீர் வீக்கம், மலசிக்கல், கை கால் வீக்கம். வம்சா வழியுடன் திருமண உறவு கொள்ளும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மன வளர்ச்சி பாதிப்பு, உடல் வளர்ச்சி குறைவு.

தைமஸ் சுரபி.

சுவாச குழாயின் அடியில் அதன் முன் பாகத்தில் மார்பு கூட்டில் மூச்சுக் குழல் பிரியும் இடத்தில் இதயத்தின் முன்புறம் காணும் சுரபி தைமஸ். நோய் எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்தல். இது ஒரு முதன்மை நிணநீர் உறுப்பு ஆகும். உடல் வளர்ச்சியில் பெரிதாகவும், வளர்ச்சி முடிந்த பின் சிறிதாகவும், சில சமயம் இல்லாமலும் போகும்.

இது பெண்களின் இன உறுப்பு வளரவும், அழகையும் கொடுக்கும். கருப்பை வளர்ச்சி காரணமாகிறது. கருவுற்ற நிலையில் தாய் குழந்தைக்கு திசு வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தை பெறும் போது இடுப்பு உறுப்பு தசை, தசை நார் தளர்வடையச் செய்யும்.

தைமஸ் குறைவால் பெண்களுக்கு வரும் நோய்கள்.

ஊனமுற்ற குழந்தை பிறத்தல். கருப்பை வளர்ச்சியின்மை, குழந்தைபேறுக்குப்பின் மாதவிடாய் போது தொடை,முதுகுதண்டு, இடுப்பு வலி.

ஆண்களுக்கு விந்து சுரபியைசுரக்கும் தன்மையை உண்டுபண்ணுகிறது. ஆண்களின் வளர்ச்சிகளில் வேறுபாடுகள் ஏற்படும்.

அட்ரீனல் சுரப்பிகள்.

சிறு நீரகத்தில் மூடி போட்டால் போல் இச்சுரபி இருக்கும்.

சுரபி அதிகமாக சுரந்தால் தோன்றும் நோய்.

1. பெண்களுக்குஉடல் பருமனாதல், சர்கரை சத்து அதிகம். மீசை வளர்தல், இரத்த அழுத்தம், புத்தி கூர்மை பாதிப்படையும்.

2. உடலில் வெளியேறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சோடியம் உடலில் தங்கி பொட்டாசியம் அதிகம் வெளியேறுவதால் CANN’S நோய் ஏற்பட காரணமாக இருப்பது அல்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பதால் தான்.

3. பெண்களின் மாதவிடாய் தன்மை மாறும். மனிதன் சகிப்புத்தன்மை குறைந்து அயர்ச்சி உண்டாகும்.

இச்சுரபி குறைவானால்.

தசை சக்தி குறைவு, மூச்சு விட கடினம், இரத்த சோகை ஏற்படும், குறைந்த இரத்த அழுத்தம், உடல் சேர்க்கை ஆர்வம், வாந்தி உண்டாகும்.ஜீரண சக்தி குறைபாடுகள்.

கணையம்.

இரப்பைக்குப் பின் உள்ளது. உணவு ஜீரணிக்க வைக்கின்றது. இன்சூலின் நீரை உறபத்தி ஆகிறது. இன்சூலின் மட்டும் 51 அமினோ அமிலமாகக் கிடைக்கிறது.

இன்சூலின் கூடினால்.

1. கல்லீரல், தசைநார்கள், உடலின் மென்மையான தசை, சிறுநீர்ப்பை நாளம் பாதிக்கப்படும்.
2. குளுக்கோஸ் அளவு குறைகிறது.
3. கல்லீரல் குளுக்கோசை வெளியேறும் அளவைக் காட்டிலும் தசைகளின் குளுக்கோஸ் பயன்படுத்தும் அளவு அதிகரிப்பதால் சர்கரை அளவு இரத்தத்தில் குறைந்து விடும்.

இன்சூலின் குறைவால்.

1. கொழுப்பு சிதைவு அதிகமாகி குளுக்கோஸாகிவிடும்.
2. சிறு நீரகம் இரைப்பை பாதிப்பு ஏற்படும்.

இன்சூலின் அதிகமாகும் போது.

1. குளுக்கோஸ்குறையும்.
2. கல்லீரல் குளுக்கோஸ் அளவை விட, தசைகளின் குளுக்கோஸ் அதிகரிப்பதால் சர்கரை அளவு இரத்தத்தில் குறைந்து விடும்.


-------------------------------------------(தொடரும்)