Monday, February 16, 2009

இரங்கல்

இரங்கல் செய்தி.

அன்பார்ந்த இணையதள அன்பர்களே !
வலைப்பதிவு நண்பர்களே!!

நான் டாக்டர் திரு.லச்சுமணன் அவர்களின் நண்பன் குப்புசாமி.க.பொ.

இன்று 16-02-2009 காலை 09.10 மணி அளவில் டாக்டர் திரு.லச்சுமணன் அவர்கள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்பதை மிக வருத்தத்திடன் தெறிவித்துக் கொள்கிறேன். அதனால் அவரது வலைப்பதிவு “http://acuvarmatherphy.blogspot.com” மேலும் தொடராது என்பதையும் பணிவுடன் தெறிவித்துக் கொள்கிறேன். இதுவரை தொடர்ந்து படித்த, பார்வையிட்ட அனைவருக்கும் அவர் சார்பில் என் நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

அன்புள்ள,
குப்புசாமி.க.பொ.
கோவை-641037.
Kuppu6@gmail.com
16-02-2009.

Wednesday, December 17, 2008

உடலில் வர்ம புள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை முறைகள் மூச்சு அடங்கல் வர்ம இடங்கள்.

உடலில் வர்ம புள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை முறைகள் மூச்சு அடங்கல் வர்ம இடங்கள்.

1. இடதுகால் முன் பக்கம்.

2. உப்புகுத்தி அல்லது குதிகால் பின் பகுதி.

3. கால் வெள்ளை (உள்ளங்கால்)

4. படங்கால்.

5. கால் பெருவிரல்.

6. முன் முட்டு கால் சிரட்டை கீழ்பகுதி இருபுரமும்.

7. வயிற்றில் குரு நாடி.

8. கை பெருவிரல்.

9. மணிக்கட்டின் கீழ்பகுதி.

10. அடிவயிறு.

11. முதுகு வரி.

12. ஐந்து விரல் கீழ் எலும்பின் பகுதி.

13. உள்ளங்கை குழி.

14. முட்டின் மேல் நரம்பு.

15. கை குழி.

16. குறுக்கின் கீழுபகுதி.

17. கூம்புப் பகுதி.

18. புறங்கழுத்து.

19. தொண்டை முன் பகுதி.

20. மார்பு.

21. நெற்றி.

22. செவிகுத்தி காலம்.

23. நட்சத்திரக் காலம்.

24. கண்ணின் மேல் பகுதி.

25. பூணெலும்பு.

26. பிடரி

இவைகள் மூச்சு அடங்கல் வர்மத்தில் நோய் பட்டிருப்பவனுக்கு மேலே குறிப்பிட்ட எந்த பகுதியில் நாடி துடிப்பு உள்ளது என கவனிக்க வேண்டும்.

உடலில் உள்ள முடிச்சுக்கள் விபரம்.

சர முடிச்சு, கருணாதி முடிச்சு, நட்டெல்லு முடிச்சு. பசு-பதி-பாச முடிச்சு, கும்பக முடிச்சு.

பூட்டுக்கள்-காறை எலும்பின் இணைப்பு,இடுப்புப் பூட்டு, முழங்கால் பூட்டு. கணுக்கால் பூட்டு.

தட்டுக்கள்- அடிவயிற்றில், வயிற்றில், மார்பில், உச்சியில், வர்மத்தில் கடுமையாக இள்வர்மம் பாதித்தால் நுரையீரல், கணையம், பித்தப்பை ஆகும்.

வர்ம துடிப்பை தெரியும் இடங்கள்.

1. குதிங்காலின் பக்கவாட்டில் கணு இலும்புக்கு கீழே.

2. வயிற்றில் தொப்புள்.

3. மார்பு எலும்புக்கூட்டில் கீழ் குவியும் மார்பகத்தில்.

4. காதில் பின் பகுதியில்.

5. மூக்கில்.

6. கழுத்து.

7. இரு கைகளில்

8. புருவம்.

9. உச்சி.

10. மர்மஸ்தானத்தில் ஆண், பெண் குறியின் முன் பகுதி.

வாத, பித்த, கப நாடிகளை வைத்து சாத்தியம், அசாத்தியம் அறியும் முறைகள் தெரியவேண்டும்.

-------------------------------------------(தொடரும்)

Monday, October 20, 2008

நிணநீர் சுரபிகள்.

நிணநீர் சுரபிகள்.

நிணநீர் சுரபி உடம்பில் உள்ள திரவத் தன்மை பாதிப்பின்றி இரத்த ஓட்டத்துடன் நிணநீர் உறுப்பு திசுக்களின் நீர் தன்மையை பாதுகாப்பது, நச்சுத் தன்மை பாதிக்காமல் நிணநீர் செல் பாதுகாப்பு அளிக்கிறது.

அதிகமாக நிணநீர் சுரபி கழுத்துப் பகுதி, தொடை பகுதி கைகளுக்கு அடியில் இச்சுரபி உள்ளது.

டான்சில்.

முக்கியமான நிணநீர் சுரபி டான்சில் உள் வாய் முதல் அறைக்கும் தொண்டை பகுதிக்கு இடையில் உள்ளது. சீதோஷ்ண மாறுதலால் குரல் கம்மல், தொண்டை வீக்கம், ஜுரம், தலைவலி, கண்சிவப்பு தோன்றுதல் ஏற்படும்.

உமிழ் நீர் கோளம்.

உமிழ் நீர் உணவை ஸ்டார்ச்சை சர்கரையாக மாற்றும். உணவை மிருதுவாக மாற்றும், தொண்டைக் கேற்ப உணவை தள்ளி விடுகிறது.

உமிழ்நீர் பாதித்தால்-இறைப்பைக்கு உணவு செல்லும் போது ஏப்பம், வயிற்றுவலி, ஜீரணக் கோளாறு, வாந்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மண்ணீரல்.

குடலுக்கு கீழ் சிறுநீரகத்திறுகு இடையில் அமைந்துள்ளது. சிகப்பு அணுக்களை உற்பத்தி செய்யும். சிவப்பு வெள்ளை நிணநீர் திசுக்களை கொண்டது.

உடற் திசுக்களிலிருந்து நிண நீர் தந்துகிகள் மூலம் வெளியேறுகிறது. தந்துகிகள் எல்லா உறுப்புகளிலும் இருக்காது.

இச்சுரபியால் வரும் நோய்-வளர்சிதைமாற்றம் கை கால் வீக்கம், தோல் ஒவ்வாமை இன விருத்தி உறுப்பு பாதிப்பு, மாதவிலக்கு தொடர்பான நோய், இரைப்பை புண் ஏற்படலாம்.

கல்லீரல்.

கல்லீரல் சுரபி ஹார்மோன்களில் தேவையற்ற சிகப்பணுக்களை அழித்து இரும்பு சத்தினை சேமிக்கும் கொழுப்புக்களை ஆக்கல், அழித்தல் செய்யும். பித்த நீரை உற்பத்தி செய்யும். நமது உடலுல் நோய்களிலிருந்து பாதுகாக்கும். இரத்த சிவப்பணுக்களை உணவாக தேவையாகும்.

இரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும்.

மூத்திரத்தில் உள்ள யூரியாவை அமிலமாக தயாரிக்கிறது. குடலில் நச்சுத் தனமையை அகற்றுகிறது.

பித்த நீர்.

கல்லீரல் சுரக்கும் ஜீரண நீர் பித்த நீர் ஆகும். கணைய நீரோடு கலந்து உணவு குழம்பை ஆல்கலின் ஆக மாற்றுகிறது. கணைய நீரோடு கொழுப்பைப் பிரிக்கும், கொழுப்பை செரிக்க துணை புரிகிறது. உடலில் தீங்கு விளைவிக்கும். அணுக்களை அழிக்கும் மலச்சிக்கலை சரி செய்யும் தன்மையுடையது.

கல்லீரல் சுரபியால் வரும் நோய் மன நோய், தசை நோய், வளர்சிதை மாற்றம். இரத்த அழுத்தம்.

மேற்கண்ட நாளமில்ல சுரபிகள், நிணநீர் சுரபிகள் பாதிப்பால் வரும் நோய்களுக்கு சிகிச்சை செய்யும் முறைகள்.

1. யோகா மூலம்.
2. அக்கு பஞ்சர் மருத்துவ மூலம்..
3. வர்ம மருத்துவ மூலம்.
4. சித்த வைத்தியம் மூலம்.
5. ஆயுர்வேத முறையில் வழி உண்டு.

யோகா முறையில்

தைராய்டு சரியாக வேலை செய்ய-

சர்வாங்க ஆசனம்.
உத்ராசனம்.
மத்ராசனம்.

தைமஸ் சுரப்பிக்கு சுரக்க.

சர்வாங்க ஆசனம்.
மத்தியா ஆசனம்.
ஹலா ஆசனம்.

பான்சிரியாஸ் சுரபி சுரக்க

தனுர் ஆசனம்.
புஜங்காசனம்.

அர்த்தமத்திய ஆசனம்.
மயூராசனம்.

அட்ரீனல் சுரபி சரியாக வேலை செய்ய.

சிர சாசனம்.
பாதஸத்த ஆசனம்.

பீனியல் சுரப்பி.

மத்தியாசனம்.
சவாசனம்.
பிராணாயாமம்.

அண்ட சுரபி சரியாக வேலை செய்ய.

சர்வங்காசனம்.
சிரசாசனம்.
பத்மாசனம்.

நாளமில்லா சுரபிகளை சுரக்கவைக்க அக்கு பஞ்சர்முறை.

DV 20 பினியல் கோளாறு.
SJ 20 பிட்யூட்டரி கோளாறு.
GB 21 தைராய்டு கோளாறு.
LI 18 தைராய்டு கோளாறு.

நிணநீர் சுரபி சரியாக வேலை செய்ய

LIV 6 -கல்லீரல், பித்தப்பை.
LIV 13 -கல்லீரல், மண்ணீரல்.

-------------------------------------------(தொடரும்)

Wednesday, September 24, 2008

நாளமில்லா சுரப்பிகளும் அக்குவர்மா மருத்துவமும்.

நாளமில்லா சுரப்பிகளும் அக்குவர்மா மருத்துவமும்.

உடலில் பல வகை சுரபிகள்உள்ளன. தனித்தனியாக திரவங்களை சுரந்து அதற்கென இருக்கும் பாதைகளின் மூலம் இரத்தத்தில் கலந்து மூளை மற்றும் உடலின் சக்திகளை கட்டுப்படுத்தி சரயான முறையில் செயல்படுத்துகிறது. இவை நாளமில்லா சுரபிகள் ஆகும்.

பிட்யூட்டரி சுரபி -: இது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. சிறு பட்டாணி அளவு உள்ளது. இச்சுரபி மூளையுடனும் மூளையின் நரம்பு மண்டலத்துடனும் இணைந்து செயல்படும். சுரபிகளின் தலைமையாக வேலை செய்யும். இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதும் சிறுநீர் உரிய நேரத்தில் வெளிப்படவும் இதவும். தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்பாலைச்சுரக்க வைக்கிறது.

1. பிட்யூட்டரி சுரபி அதிகமாக சுரந்தால் மனிதன் மிகவும் உயரமாக வளருவான். முகத்தின் தாடை எலும்பு, கை விரல்கள், கட்டை விரல்கள், தேவைக்கு அதிகமாக வளரும். தலை எலும்பு பெருத்துவிடுதல்..

2. அதிகமாக வியர்த்தல், பெருத்த உடல் வளர்ச்சி.

3. மாணவ பருவத்தில் அபரிதமாக இருத்தல்.

4. ஆண்மை குறைவு, முதுகு தண்டு வலி, அடிக்கடி தலை வலி, தூக்கமின்மை.

5. உடல் பலஹீனம்.

6. பெண்களிக்கு மாதவிடாய் குறைவு, கூடுதல், சரியான நேரம் வருவதில்லை, கருப்பை வீக்கம், சிறுநீர் அதிகம் போதல், கண்பார்வை கோளாறு.

7. மூளை கட்டிகள்.

8. இதய கோளாறு.

9. நீரிழிவு.

பிட்யூட்டரி சுரபி குறைவாக சுரந்தால் -:

பசியின்மை, குமட்டல், குறை இரத்த அழுத்தம், குட்டை வளர்ச்சி, பிறப்பு உறுப்பு பாதித்தல், உடலில் தோல் சுருக்கம், கட்டிகள், மன வளர்ச்சி குறைந்து போதல், தலை தொண்டையில் உருவாகும் கட்டி, மேக கிரந்தி, சர்க்கரை அளவு குறைதல்.

தைராய்டு.

தொண்டை இரு பக்கங்களிலும் கழுத்தின் முன் புறத்திலும் இரண்டு சுரபிகள் உள்ளன. மூச்சுக் குழலின் மேல் பகுதியில் இரு புரமும் குறுகிய தைராய்டு திசுவினால் ஆனவை.

தைராய்டு அதிகமாக சுரந்தால் –நோய்கள்.

மாதவிடாய் குறைவு, உடல் அரிப்பு, எரிச்சல், கண் பாதிப்பு, ஜன்னி, வாந்தி, எடை குறைவு, பசி அதிகரிப்பு, சுண்ணாம்பு சத்து குறைவு, உயர் இரத்த அழுத்தம், விரல் நடுக்கத்துடன் பலவீனம், தொண்டை வீக்கம், தலையில் கொழுப்புக்கட்டி, இதய தசை துடிப்பு அதிகம், இளம் பெண்கள் இச்சுரபியால் பாதிப்பு.

தைராய்டு குறைந்தால் -: நோய்கள்.

ஹார்மோன் குறைவால் பிறவியிலிருந்து குழந்தை பாதிப்பு அடைதல். பிட்யூட்டரி சுரபியின் கோளாறு, எடை அதிகரிப்பு, தைராய்டு வீக்கம், வறட்சி, மூட்டு வீக்கம், முதுகு வலி, நகங்கள் ஒடியும், மந்தமாக இருப்பார்கள், பெண்கள் மாதவிடாய் 10 நாள் நீடிக்கும், உடலின் நீர் வீக்கம், மலசிக்கல், கை கால் வீக்கம். வம்சா வழியுடன் திருமண உறவு கொள்ளும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மன வளர்ச்சி பாதிப்பு, உடல் வளர்ச்சி குறைவு.

தைமஸ் சுரபி.

சுவாச குழாயின் அடியில் அதன் முன் பாகத்தில் மார்பு கூட்டில் மூச்சுக் குழல் பிரியும் இடத்தில் இதயத்தின் முன்புறம் காணும் சுரபி தைமஸ். நோய் எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்தல். இது ஒரு முதன்மை நிணநீர் உறுப்பு ஆகும். உடல் வளர்ச்சியில் பெரிதாகவும், வளர்ச்சி முடிந்த பின் சிறிதாகவும், சில சமயம் இல்லாமலும் போகும்.

இது பெண்களின் இன உறுப்பு வளரவும், அழகையும் கொடுக்கும். கருப்பை வளர்ச்சி காரணமாகிறது. கருவுற்ற நிலையில் தாய் குழந்தைக்கு திசு வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தை பெறும் போது இடுப்பு உறுப்பு தசை, தசை நார் தளர்வடையச் செய்யும்.

தைமஸ் குறைவால் பெண்களுக்கு வரும் நோய்கள்.

ஊனமுற்ற குழந்தை பிறத்தல். கருப்பை வளர்ச்சியின்மை, குழந்தைபேறுக்குப்பின் மாதவிடாய் போது தொடை,முதுகுதண்டு, இடுப்பு வலி.

ஆண்களுக்கு விந்து சுரபியைசுரக்கும் தன்மையை உண்டுபண்ணுகிறது. ஆண்களின் வளர்ச்சிகளில் வேறுபாடுகள் ஏற்படும்.

அட்ரீனல் சுரப்பிகள்.

சிறு நீரகத்தில் மூடி போட்டால் போல் இச்சுரபி இருக்கும்.

சுரபி அதிகமாக சுரந்தால் தோன்றும் நோய்.

1. பெண்களுக்குஉடல் பருமனாதல், சர்கரை சத்து அதிகம். மீசை வளர்தல், இரத்த அழுத்தம், புத்தி கூர்மை பாதிப்படையும்.

2. உடலில் வெளியேறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சோடியம் உடலில் தங்கி பொட்டாசியம் அதிகம் வெளியேறுவதால் CANN’S நோய் ஏற்பட காரணமாக இருப்பது அல்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பதால் தான்.

3. பெண்களின் மாதவிடாய் தன்மை மாறும். மனிதன் சகிப்புத்தன்மை குறைந்து அயர்ச்சி உண்டாகும்.

இச்சுரபி குறைவானால்.

தசை சக்தி குறைவு, மூச்சு விட கடினம், இரத்த சோகை ஏற்படும், குறைந்த இரத்த அழுத்தம், உடல் சேர்க்கை ஆர்வம், வாந்தி உண்டாகும்.ஜீரண சக்தி குறைபாடுகள்.

கணையம்.

இரப்பைக்குப் பின் உள்ளது. உணவு ஜீரணிக்க வைக்கின்றது. இன்சூலின் நீரை உறபத்தி ஆகிறது. இன்சூலின் மட்டும் 51 அமினோ அமிலமாகக் கிடைக்கிறது.

இன்சூலின் கூடினால்.

1. கல்லீரல், தசைநார்கள், உடலின் மென்மையான தசை, சிறுநீர்ப்பை நாளம் பாதிக்கப்படும்.
2. குளுக்கோஸ் அளவு குறைகிறது.
3. கல்லீரல் குளுக்கோசை வெளியேறும் அளவைக் காட்டிலும் தசைகளின் குளுக்கோஸ் பயன்படுத்தும் அளவு அதிகரிப்பதால் சர்கரை அளவு இரத்தத்தில் குறைந்து விடும்.

இன்சூலின் குறைவால்.

1. கொழுப்பு சிதைவு அதிகமாகி குளுக்கோஸாகிவிடும்.
2. சிறு நீரகம் இரைப்பை பாதிப்பு ஏற்படும்.

இன்சூலின் அதிகமாகும் போது.

1. குளுக்கோஸ்குறையும்.
2. கல்லீரல் குளுக்கோஸ் அளவை விட, தசைகளின் குளுக்கோஸ் அதிகரிப்பதால் சர்கரை அளவு இரத்தத்தில் குறைந்து விடும்.


-------------------------------------------(தொடரும்)

Thursday, August 28, 2008

வர்ம மருத்துவ உடல் பிரிவுகள்.

ஒரு பெண் குழந்தைக்கு பள்ளியில் கரும்பலகையில்
ஆசிரியர் எழுதுவது தெறியவில்லை அதற்காக ஒரு
மாத அக்குப் பிரசர் ஊசிமூலம் சிகிச்சை அளித்தேன்
தற்போது 90 சதம் குணமடைந்து பார்வை தெளிவாக
உள்ளது.அந்த திழற்படந்தான் மேலே நீங்கள் காண்பது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மருத்துவ உடல் பிரிவுகள்.

நமது உடல் பஞ்ச கண்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. சிரசு அதாவது கழுத்திக்கு மேல் பகுதி.
2. நாபி கண்டம் கழுத்துக்கு கீழ் தொப்புள் வரை.
3. மூலக் கண்டம் தொப்புள் முதல் மூலம் வரை.
4. கர கண்டம் இரு கைகளும்.
5. பாத கண்டம் இரு கால்கள்.

உடலில் உள்ள உறுப்புக்கள்-32 ஆகும். இவைகளில் ஒடிவு, முறிவு, குத்து, இடரல், ஏற்பட்டால் வர்ம காயம் ஏற்படும்.

நமது உடலில் உள்ள உறுப்புகள் எலும்புகள் 208 ஆகும். நரம்புகள் 72000 உள்ளன. நரம்புகளிலும் ஏற்படும் பேதங்களினால் இடி, குத்து, தாக்குதல் இவைகளால் வர்மங்கள் ஏற்படும் உடலின் உள் பஞ்ச அடுகுகள், தசபூட்டு விசை உடலில் ஐந்துவிதமான தட்டுக்கள் உள்ளன.

மருத்துவ முறை.

அக மருத்துவம் நாம் உள்ளே சாப்பிடும் மருந்துகள் அக மருந்துகள் நெய்மூலமாகவும், தேன் மூலமாகவும் நோயிக்குத் தக்க மருந்துகளையும், அனு பானங்களையும் மருந்தை முறையாக சுத்தி செய்தும், 1.கஷாயம் மூலமாகவும், 2.பதங்கம், 3.வெள்ளை மூலமாகவும். 4. லேகியம் 5. எண்ணெய் 6.குளிகை, 7.தீநீர்,8. மெழுகு. 9. செந்தூரம் 10. குடி நீர். கற்கம்,11. குழம்பு,
12 செந்தூரம். 13 பற்பம், 14.கட்டு,15.உருக்கு, 16.களங்கு, 17. சுண்ணம்,
18. சத்து, 19. களி, 20. அடை, 21. சூரணம், 22. இரசாயனம், 23. மணபாகு, 24. தேனூறல், 25. சர்பத், 26. மாத்திரை, 27. குருகுளிகை,28. ரசம், 29. கிரதம், 30. கற்கம், 31. புட்டு, 32. வடகம், மூலமாக உடல் உள் மருத்துவ முறையாக கொடுக்கப் படுகின்றன.

புற மருந்துகள்.

உடலில் வெளி அவையங்களில் வெளி உபயோக மருந்துகளை கொண்டு நோயின் தன்மைகளை சுகப் படுத்தும் முறை.

கட்டுதல், பீச்சு, புகை, மையிடல், பொடியிடுதல், நசியம், கலிக்கும், ஊதல், நாசிகாபரணம், முறிச்சல், கீறல், காரம், அறுவை, பட்டை கட்டல், உறிஞ்சல், அசுத்த ரத்தத்தை வாங்குதல், அட்டைவிடல், கட்டிகை, வர்த்தித்தல், நீர், சீலை, களிப்பு, தொக்கணம், பொட்டணம், வேதுகாட்டல், பூச்சு, ஒற்றடம், பற்றிடல், பசை,களி, சலாகை, சிட்டிகை முதலியன.

ஏழு தாதுக்கள் கூடினால் குறைந்தால் என்ன வாகும்.

1.சாரம் கூடினால் பசிகுறைவு.

சாரம் குறைந்தால் தோல் சுரசுரப்பு, நோவு, இளைப்பு, வாட்டம், சப்தத்தில் வெறுப்பு.

2.குருதி கூடினால் புருவம், உதடு, கொப்புள், அண்டம், தோலின் உட்புறம், வெளிப்புறம், உள் பட்ட இடத்தில் கொப்புளம் காணல், ஈரல் வீக்கம், கட்டி, சூலை, பசியின்மை, குருதி வாந்தி, இரத்த மூத்திரம், சிவந்த கண், தோல் சிவப்பு, குருதி தடிப்பு, பெருநோய்,காமாலை, வெறி முதலியன.

குருதி குறைந்தால் புளிப்பு குளிர்ச்சிப் பொருளில் அவா, நரம்பு தளர்ச்சி, வறட்சி, உடல் நிறம் குன்றல் ஆகியவை.

3 ஊனின் கூடினால் கன்னம், வயிறு, தொடை, குறி இவற்றில் கட்டிகள், கண்டமாலை, கிரந்தி, கழுத்து வீங்குதல் முதலியன.

ஊன் குறைந்தால் ஐம்பொறி சோர்வு, கீழ்வலி, தாடை, பிட்டம், தவடை, குறி இவை சுருங்குதல்.

4.கொழுப்பின் அளவு கூடினால் ஊன் மிகுதி பிணிகள், களைப்பு, சின்ன வேலைகளிலும் பெருமூச்சு, பிட்டம், குறி, மார்பு, வயிறு, தொடை ஊன் பெருகி தொங்கல் விழும்.

கொழுப்பு குறைந்தால் இடுப்பு பலவீனமுற்று வலித்தல், உடலிளைப்பு, ஈரல் வளர்ச்சி முதலியன.

5.எலும்பு கூடினால் எலும்புகளும், பற்களும் கூடுதல்.

எலும்பு குறைந்தால் எலும்பு சத்துக்களில் வலி, பற்கள் விழுதல், நகம், மயிர் உதிர்தல், வெடித்தல் முதலியன.

6. மூளை வளர்ச்சி கூடினால் உடல் பாதித்தல், விரல் கணுக்களில் அடி பருத்தல், சிறு நீர் குன்றல் முதலியன.

மூளை குறைவு ஏற்பட்டால் எலும்பு, தோள் விழும், திகைப்பு, கண்கம்மல் இவை காணும்.

7. சுக்கிலம் கூடினால் பெண்ணிச்சையும், கல்லடைபும் வரும்.

சுக்கிலம் குறைந்தால் புணர்ச்சியில் வெண்ணீரும்,சுரேணிதமும் துளியாக வரும், குருதி வரும், விதை குத்தலுடன் வலி, குறி கருத்தல் முதலியன உண்டாகும்.


-------------------------------------------(தொடரும்)

Friday, August 15, 2008

வர்மமும் நமது உடல் அமைப்பும்.

வர்மமும் நமது உடல் அமைப்பும்.

நமது கண்பார்வையில் தெரியும் உடலமைப்பும்-:

1) இதய-ரத்த ஓட்ட சுழற்சிப் பாதை
2) சுவாச பாதை.
3) உணவு பாதை.
4) எலும்பு மண்டலம்.
5) தசை மண்டலம்.
6) நிணநீர் மண்டலம்.
7) நாளமில்லா சுரபிகளின் பாதை.

சக்தியை பயன்படுத்தி வாசி இயக்கம், அமிர்த நிலை இயக்கம் உள்ளன. அவை-:

1. வாசி தச நாடிகளை சார்ந்து ஓடும்.

2. அமிரத நிலை சந்திரனில் ஏற்படும் வளர்பிறை தேய்பிறைகளை ஒத்து உடல் நிலை மாறுபடும். இவ்விரண்டும் வேலை செய்யும் போது அதன் நிலையில் நிற்கும் போது உடலில் அடியோ, மிதியோ, வேகமாகத் தாக்கும், தாக்குதல் பட்டால் வர்மம் ஏற்படும். இவைகள் தாக்கப்படும் போது உடலில் சில புள்ளிகள் அதாவது தசவாயு, தசநாடி, பஞ்சபூதங்கள் இருக்கும் இடங்களில் 12 உறுப்புகளில் உண்டாகும் நரம்பு பாகங்களில் சில புள்ளிகள் உள்ளன. அதுவே வர்மபுள்ளிகளாகும்.

பொறிகள் 5 மர்மம் ஏற்பட்டல் ஏற்படும் வித்தியாசம்.

செவி- ஒலியை அறியும் இவை உடலில் சில இடங்களில் வர்ம புள்ளிகளில் தாக்கும் போது செவியானது தன்னுடைய ஒலி கேட்கும் திறன் குறையும்.

தோல்- வாயு உடனிருந்து உடலை தொடு உணர்வை அறியும். சில வர்மங்களில் அடிபடும் போது உணர்விழந்து மயக்கம் வரும்.

மூக்கு- வாசனையறியவும், வர்மங்களில் அடி படும் போது நீர் வடியும், வாசனை குறையும்.

கண்- பார்க்கும் திறன். அடிபடும்போது கண்களை மூடிக்கொள்ளும். கண் நிலை குத்தி செயல் படாமல் போகும் கண்ணில் நீர் வடியும்.

நாக்கு- சுவை அறியும். சில வர்மங்களில் நாக்கு அடிபட்டால் உள இழுக்கும், அல்லது வெளியே நாக்கு தொங்கிவிடும்.

கன் மேந்திரியம்-:

வாய்- பேச்சுகுரல் கொடுக்கும் இவை வர்மத்தில் தாக்கப்பட்டால் பேச்சு வராது, வாய் பூட்டிக் கொள்ளும், வாய் கோணும்.

கை- வர்மங்களில் பாதித்தால் கை அசைவு இருக்காது, பலம் குறையும், விரல்கள், தசைகள் செயல்படாது.

கால்- பாதம் உணர்ச்சியில்லாமலும் நடக்கும் சக்தியில்லாமலும் நரம்புகள் செயலற்றுப் போகும்.

குதம்-மலத்தைக்கழிக்கும் தன்மையிழந்து தானாகவே வெளியேறும். இது அபாயக் குறியாகும்.

குறி- பலமான வர்மங்கள் ஏற்பட்டால் விந்து தானாகவே வெளியேறும்.

உடலில் ஏற்படும் இயற்கை வேகங்களை அடக்கினால் ஏற்படும் விளைவுகள்.

1) சுவாசம்- சுவாசத்தை அடக்கினால் தொடர்ந்து இருமல்,வயிற்று பொறுமல், சுரம், சூலை நோய் சுவையின்மை நீர்த்தன்மையுண்டாகும்.
2) கண்ணீர்- கண்ணீரை அடக்கினால் தலைவலி, வயிற்று குன்ம ம், கண் நோய், மார்பு நோய் பீனிசம் வரும்.
3) வாந்தி- உடலில் தோல் நோய், நமச்சல், கண்நோய், பித்த விஷம், இரைப்பு, இருமல் வரும்.
4) இருமல்-இருமலை அடக்கினால் மூச்சு திணரல், மூச்சு துர்நாற்றம், இதயநோய் உண்டாகும்.
5) கொட்டாவி-கொட்டாவியை அடக்கினால் முகம் வாடும், இளைப்பு வரும், மண்டை பாரம், மேகநோய், வெட்டை நோய், உணவு செரிக்காமை
6) தும்மல்- தும்மலை அடக்கினால் தலை நோய், முகம் வலிக்கும், இடுப்பு வலி, வர்ம நோய், உண்டாகும்.
7) வாயு-வாயு கீழ் நோக்கினால் ஆசன வழியே செல்லும் அடக்கினால் மார்பு நோய், குடல் வாதம், உடல் வலி, துன்பங்கள், மலசலம் கட்டல், ஜீரண கோளாறு ஆகும்.
8) சிறு நீர்- சிறு நீரை அடக்கினால், கல்லடைப்பு, மூட்டு வலி, ஆண்குறி சோர்வு ஆகிய உண்டாகும்.
9) மலம்- அபான வாயு மலத்தை கீழ்நோக்கித்தள்ளும் மலத்தை அடக்கினால் முழங்கால் வலி, தலைவலி, உடல் சோர்வு, முகச்சோர்வு ஏற்படும்.
10) தாகம்,பசி- பசி அடக்கினால், தாகத்தை அடக்கினால்,உடல் உறுப்புகள் தத்தம் வேலைகளைச் செய்யாது. உடல் இளைப்பு, முகவாட்டம், மூட்டுக்களில் வலி, மூல சூடு, வயிற்று ரோகம் உண்டாகும்.
11) தூக்கம்- தூங்காமல் இருந்தால் மூல சுடு ஏற்படும், தலை பாரம், கண்வலி, செவிடு உண்டாதல், பேச்சு குறைதல்.
12) சுக்கிலம் சுரோணிதம்- அடக்கினால் சுரம், நீர்கட்டு கைகால் மூட்டுகளில் வலி, மார்பு அடைப்பு, வெள்ளை கசிதல்.
13) இளைப்பு- இருமலை அடக்கினால் நுரையீரல் நுண்ணிய தவாரங்கள் அடைப்பு, மூர்ச்சை உண்டாகும்.


-------------------------------------------(தொடரும்)

Tuesday, July 29, 2008

ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள்.

ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள்.

ஆக்கினை -: நெற்றி தலையில் அடிபட்டால் சிலேத்தும நோய், கண்பார்வை குறைவு, காது கேளாமை, ருசியின்மை நீர் தோஷமாகிய ஆஸ்துமா, சயனஸ், பைத்தியம், மண்டை ஓட்டில் அடிபட்டால் நீர் இறங்கும் தன்மை ஆகிய நோய்கள் உண்டாகும். குண்டலீனி யோக தவறாக செய்தாலும் நோய்கள் ஏற்படும்.(பஞ்சபூதங்களின் ஆகாயம் ஆகும்)

விசுத்தி -; நெஞ்சுக்கு மேல் பகுதி அடிபட்டால் நுரையீரல் தாக்கப்பட்டால் சயரோகம், படபடப்பு, ஆஸ்த்மா, குனிந்தால் மூச்சு முட்டுதல், நடந்தால் மூச்சு வாங்குதல் அதிக கோபம் ஆகியவை தாக்கப்படும்.(காற்று தன்மையாகும்)

அளாதகம் -: மேல் வயிற்றுப் பகுதி, பித்தப்பை, கல்லீரல் வீக்கம், வயிறு உப்பிசம், மஞ்சள் காமாலை, ஜீரணக்குறைவு, குடலுருஞ்சிபாதிப்பு, உடல் வீக்கம் முதலியவை ஏற்படும். (நெருப்பு தன்மையாகும்)

மணிபூரகம் :- வயிற்றின் மத்திய பகுதியில் குடல் கிட்னி, நீரடைப்பு, கல்லடைப்பு வரும். (தண்ணீர் தன்மையாகும்.)

சுவதிஷ்டானம் -: வாத சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு ஏற்படும். (மண் தன்மை)

மூலாதாரம் -: மூல நோய், சுக்கில நோய்கள் வரும். இதில் குண்டலீனி யோகம் செய்யும் யோகிகள் குரு மூலம் முறையாக இயக்கத் தெரியவில்லை எனில் மேற்குறித்த நோய்களில் மாட்டிக் கொள்வார்கள். மரணம்வரை வந்து விடும். நமது உடலில் தலையும் மூலாதரமும் வட தென் துருவமாகும். மூலத்தில் ஆடும் சப்தமும் உண்டாகும்

குண்டலினி யோகம் செய்பவர்கள் பிராயணாமம் செய்கிறேன் என்று உடல் ஆரோக்கியமாக இருக்கும் உடலில் எந்த பிரச்சனையும் உண்டாகாது என அசட்டையாக இருகக்கூடாது
இதனை முறையாக செய்யவில்லை எனில் சக்தி ஓட்டம் தவறாக ஓடினால் குடலை சுற்றி உள்ள மெல்லிய ஜவ்வு கிழிந்து சிறு குடல் இறங்கி விடும். இதை குடல் இரக்கம் என கூறுவார்கள்.

யோக சக்திக்கேற்ப சாப்பாடு, எண்ணைய் குளியல் வேண்டும், அவ்வாறு செய்யாவிடில் குறி வழியாகவும் குதம் மூலம் வழியே கீளே வெப்பத்தை வீசும். விந்து வெளி வரும், மூலவியாதி தாக்கும். அதிக குளிரால் குறியை செயலிழக்க வைக்கும், குடல் சரியாக வேலை செய்யாது.

எனவே ஆறு ஆதாரங்கள் முறையாக வேலை செய்ய வேண்டும் இவைகளில் வர்ம புள்ளி தாக்கப்பட்டால், செயலிழக்கவில்லை என்றாலும் மேற்கண்ட நோய்களால் பீடிக்கப் படும். இந்த நோய்களை குண்டலீனியின் சரியான இயக்கத்திலும், வர்ம மருத்துவரீதியாக குணப்படுத்த முடியும்.
-------------------------------------------(தொடரும்)