Saturday, March 1, 2008

சர ஓட்டம்.

4)ஆதி கால வர்ம மருத்துவ முறைகளும்அக்குபிரசர்,
அக்குபஞ்சர் முறைகளும்.(தொடர்ச்சி)



அக்குவர்ம தெரபி முழுமையாக பரம்பரைவர்ம வைத்தி
யத்தை தழுவியது. இந்த வைத்தியம் உப வைத்தியமாக
பெயர் பெற்றாலும். தனித்துவம் வாய்ந்த மருத்துவம்
ஆகும். எந்த வித மருத்துவம் ஆனாலும் பூரணமாக
குணப்பட வைப்பது வர்ம வைத்திய முறையாகும்.
மருத்துவத்தில் அக்குவர்மா முறைகளை கையாண்டால்
முழுவெற்றியை காண்பது முடியும்.

ஆறு ஆதாரங்களை கொண்டும், பஞ்சபூதங்களைக்
கொண்டு நமது உடலை சர பலன்களை உபயோகித்து
உடம்பை சீராக அமைய வைக்கமுடியும். சர ஓட்டம்
அதாவது சூரியக் கலை, சந்திரக் கலை, சுழிமுனை
இவைகள் முறையாக செயல் படவில்லை
எனில் உடல் நலம் குன்றுவதும், பவ காரியங்கள்
ஒழுங்காக செயல் பட முடியாது. இதனை சீராக
இயங்கும் போது உடல் இயல்பு நிலையில் இயங்கும்,
இவைகள் முறையாக இயங்குவதற்கு யோகக்கலை
முக்கியமாக பயன்படுகிறது. இவைகள் சீர்கெட்டுப்
போய்விட்டால் தச வாயுக்களும், தசநாடிகளும்
ஒழுங்காக வேலைசெய்யாது.

நமது உடல் வளர்பிறையில் செயல்படுவதும் தேய்
பிறையில் செயல்படுவதும் வித்தியாசம் இருக்கும்.
சர ஓட்டத்தில் சில வித்தியாசமான புள்ளிகள்
அமைந்துள்ளன. இவைகளை அக்கு பஞ்சர் புள்ளி
களிலும் வர்ம புள்ளிகளிலும் அமைந்துள்ளது. இந்த
புள்ளிகளை உபயோகித்து நமது கைகளைக்
கொண்டு நன்றாக அழுத்தியும், முக்கியமான
புள்ளிகளை இளக்கியும், கூர்மையான வெள்ளி,
தங்கம், உடலை பாதிக்காத உலோக ஊசிகளைக்
கொண்டு உடலில் உள்ள புள்ளிகளில் குத்தி சரி
செய்யமுடியும். நமது உடலில் உள்ள அனைத்து
உறுப்புகளிலும் உள்ள முக்கிய இயக்கப் புள்ளிகளை
இயக்கமுடியும்.

-------------------------(தொடரும்)

No comments: