Tuesday, February 5, 2008

அக்குபிரசர், அக்குபஞ்சர்

3)ஆதி கால வர்ம மருத்துவ முறைகளும் அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளும்.(தொடர்ச்சி)


வர்மக்கலை அறிந்த குடும்பத்தினர் வர்ம முறைகளைச் சாரந்த சூட்சமத்தை முறையாக பயின்று மனித இனத்திற்கு சிகிச்சை அளித்தனர். இவர்களை வர்ம ஆசான் என்று கூறினார்கள். இவர்கள் முறையே பாரம்பரியமாக சித்த வைத்திய முறைகளையும் ஆயுர் வேத முறைகளையும் சார்ந்த வர்ம வைத்தியம் செய்துவந்தனர்.

இப்போது புது முறைகளையும் யுக்திகளைக் கையாண்டு அக்குபிரசர், அக்குபஞ்சர், சரபயிற்சி, வர்ம் முறை, யோகாசன முறைகளைக் கையாண்டு முதுகுத்தண்டு, கழுத்து, தோள், முட்டிவலிகள், வாய்கோணல், காது கேளாமை, கண்பார்வைக் கோளாறுகள், பேசும் திறன் மற்றும் நாளடைவில் குணம் ஆகாத ஆஸ்த்துமா, டி.பி. இதயநோய், குன்மம், மேகநீரழிவு, விரை நோய், ஆபரேசன் இல்லாத் நரம்பு சம்பந்தப் பட்ட நோய்களை புற மருத்துவத்திலும் குணப்படுத்த முடிகின்றது.

இயற்கை மருத்துவ முறையில் 'உணவே மருந்து' என உணவுகள் மூலம் உடலை சீர் செய்யப் படுகிறது.

விபத்தினால் ஏற்படும் மன அதிர்ச்சியில் பாதிக்கப் பட்ட அதிக இரத்த அழுத்தம், பய உண்ர்வுகள் தூக்கமின்மை, வாய்புலம்பல் ஆகியவைகளையும் அக்குவர்ம தெரபி மூலம் குணப்படுத்த முடியும்.

இத்தகைய சிறப்பு மிக்க அக்கு வர்ம தெரபிமுறையின் பெருமைகள் உலகறிய செய்ய இது போன்ற முறைகளை பல் வேறு அறிஞ்ர்கள் பலவிதமாக முயற்ச்சி செய்துள்ளார்கள் அவைகளில் இம்முறைகளும் ஒன்றாகும். இந்த மருத்துவத்தின் நன்மை தரும் இரகசியங்களை அறிந்து கொள்வோம்.
---------------------------------------------------(தொடரும்)

1 comment:

Chitra said...

சார், அது ஆண்டவன் ஊருக்கு முதலாளி இல்ல. ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி